Monday, August 24, 2009

எழுத்தாளர் பூரம் சத்யமூர்த்திக்கு ஆர்.வி. விருது

(செய்தி - நன்றி தினமணி )


எழுத்தாளர்கள் பூரம், ரேவதிக்கு ஆர்.வி. விருது


சென்னை, ஆக. 23: ஆர்.வி. அறக்கட்டளை சார்பில், "பூரம்' எஸ்.சத்தியமூர்த்தி, "ரேவதி' டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.வி. விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுடன் அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.


சிறந்த நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான ஆர்.வி.யின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 29-ல் அனுசரிக்கப்படுகிறது.


அன்றைய தினம் சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள சங்கராலயம் அரங்கில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தா விருதுகளை வழங்குகிறார்.


மேலும் "சாதனையாளர் ஆர்.வி' என்ற நூலின் முதல் பிரதியையும் அவர் வெளியிடுகிறார். அதை எழுத்தாளர் பெ.சு.மணி பெறுகிறார்.


நிவேதிதா பதிப்பகம் தயாரித்து வழங்கும் "ஆர்.வி. சிறுகதைகள்' தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களின் முதல் பிரதியை "தினமணி' நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிடுகிறார். இதை எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) பெறுகிறார்.

************
வயதான காலத்திலும் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்காக உழைத்து வரும் பெரியவர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
வணக்கங்கள்!

No comments: