Friday, December 11, 2009

கவிதை

தேடல்...

விசில் ஊதிக் கொண்டே
செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் குடும்பத்தின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிவாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
வயதானவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்ந்து கொண்டிருகிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாய்.




No comments: