Friday, December 18, 2009

கவிதை-2


இரை கவ்வும் நண்டைப் போல
ஏதோ ஓர் அவஸ்தை
என் கவிதையைக் கவ்வி இருக்கிறது

முதல் இரவுப் பெண்ணின்
முதல் சுக வேதனை போல்

விட்டு... விட்டு...
விட்டு... விட்டு...

மெல்லவும் முடியாமல்...
விழுங்கவும் முடியாமல்...

பிரசவிக்கும் முன்னேயே
பிறழ்ந்து விட்ட கவிதையினை
நாய் தன் குட்டியை உண்ணுவது போல்
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
எனக்குள்ளாகவே!

No comments: